பல்லாவரம் மற்றும் மதுரவாயலுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் சி.வி.சண்முகம்.!
minister cv shanmugam assembly speech
2020 - 2021 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கடந்த வெள்ளிக்கிழமை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் கடந்த திங்கள் கிழமை முதல் நடைபெற்று வருகிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு பற்றியும், குடியுரிமை சட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
எதிர்கட்சிகளின் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் காரசாரமாக பதிலளித்து வருகிறார். இந்நிலையில், சென்னை பல்லாவரம் மற்றும் மதுரவாயல் வட்டங்களில் நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும் அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் சட்டசபையில் அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்துள்ளார்.
தங்கள் தொகுதிகளில் நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து அமைச்சர் சி.வி.சண்முகம் விளக்கம் அளித்துள்ளார்.
English Summary
minister cv shanmugam assembly speech