அதிமுகவினருக்கு அதிர்ச்சி கொடுத்த எம்ஜிஆர் சிலை! கடும் அதிர்ச்சியில் இபிஎஸ், ஓபிஸ்!! - Seithipunal
Seithipunal


ண்மையில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்த புகைப்படம் ட்விட்டர் முழுவதும் வைரலாகி வந்தது. இதனை தமிழகத்தில் உள்ள பாஜகவினர் பதிவிட்ட உள்ளதாக கூறப்பட்டது. அந்த புகைப்படத்தை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் அவரது டுவிட்டரில் வெளியிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பினார்.

பின்னர் அவரே அதனை நீக்கி விட்டார். தற்போது அந்த பேச்சு அடங்கி உள்ளது. இந்த நிலையில் திருவண்ணாமலை அருகே அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு காவி கலர் பூசப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த சிலை அதே இடத்தில் 30 ஆண்டுகாலமாக இருக்கின்றது. அந்த சிலைக்கு இதுவரையில் வெள்ளை நிறம்தான் பூசப்பட்டு வந்துள்ளது. ஆனால் தற்போது காவி வர்ணம் பூசப்பட்டு இருப்பதை கண்டு அதிமுகவினர் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதை யார் செய்தது என்று தெரியவில்லை. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MGR statute paint with Saffron color


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->