மீண்டும் தொடங்கியது மெட்ரோ சேவை!! பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பணியாளர்கள்!! - Seithipunal
Seithipunal


சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் நிரந்தர பணியாளா்கள் சிலா் அண்மையில் பணி நீக்கம் செய்யப்பட்டனா். இதனை கண்டித்து மெட்ரோ ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனை முடிவுக்கு கொண்டுவர இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது. 

இதற்கிடையே, பணியாளா்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால், ரயில் சேவையில் பாதிப்பு இருக்காது என்று மெட்ரோ நிா்வாகம் தொிவித்து இருந்தது. ஆனால், இன்று சில மெட்ரோ ரயில் நிலையங்களில் சிக்னல் கோளாறு காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டது. 

இதனைத் தொடா்ந்து தற்போது சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. 

மேலும் வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ சேவை வழக்கம் போல் இயங்கும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பணியாளர்கள் தரப்பில், வேலை நிறுத்தத்தால் தான் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது என்றும், தொழிநுட்ப கோளாறு என்று நிா்வாகம் பொய் கூறுவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் தடத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் சரிசெய்யப்பட்டு, தற்போது ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

metro train problem may cleared


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->