பொங்கலுக்காக மெகா சலுகையை அறிவித்த மெட்ரோ ரயில் நிர்வாகம்.! - Seithipunal
Seithipunal


பொங்கல் விடுமுறை நாட்களான ஜனவரி 15,16,17 ஆகிய தேதிகளில் மெட்ரோ ரயில்களில் 50 சதவீத சலுகை கட்டணத்தில் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில்களில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில், மெட்ரோ ரயில் பயணச்சீட்டுகளில் 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்பட்டு வருகிறது. இது 2020 ஆம் ஆண்டு அரசு பொது விடுமுறை தினங்களுக்கும் இந்த சலுகை பொருந்தும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி பொங்கல் அரசு விடுமுறை நாட்களான வரும் 15, 16, 17 ஆகிய தேதிகளில் இந்த சலுகை வழங்கப்பட உள்ளது.

மேலும் காணும் பொங்கல் அன்று அரசினர் தோட்டம் மற்றும் ஏஜி.டிஎம்எஸ் மெட்ரோ இரயில் நிலையங்களில் இருந்து மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் சென்று வர ஏதுவாக காலை முதல் இரவு வரை சீருந்துகள் இயக்கப்படவுள்ளன. 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகைகளையும், வசதிகளையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

metro train offer for pongal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->