என் மகளை கருணை கொலை செய்து விடுங்கள்..! கலங்க வைக்கும் சோக சம்பவம்..!  - Seithipunal
Seithipunal


கருணை கொலை என்பது, ஏதேனும் ஒரு நோயால் அவதிப்பட்டு தினம் தினம் உயிருடன் இருந்து வேதனையை அனுபவித்து வரும் நபர் வாழ்வதை விட மரணிப்பதே மேல், என்று சட்டப்படி அவர்களை கொலை செய்ய வைப்பது தான் கருணை கொலை. அந்த வகையில் தென்காசியில் ஒருவர், அவர் மகளுக்கு கருணை கொலை வேண்டி மனு அளித்துள்ளார். 

தமிழகத்தின், தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை கொட்டாகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகையா. இவருக்கு 68 வயதாகிறது, இவர் அவரது மனைவி, மகளுடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு 35 வயதில் சுப்புலட்சுமி என்ற மகள் ஒருவர் இருக்கிறார்.

சுப்புலட்சுமி கடந்த 25 ஆண்டுகளாகத் தாடை விலங்கு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் மகள் சுப்புலஷ்மியை தொடர்ந்து பராமரிக்க  முடியாத காரணத்தால் அவரை கருணை கொலை செய்யவேண்டும் என்று அவரது தந்தை முருகையா ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்கிறார். 

இதுகுறித்து அவர் அளித்துள்ள மனுவில், எனக்கும் என் மனைவிக்கும் வயதாகி விட்டது.  கூலி தொழில் செய்வதால் எங்கள் மகளை சரியாக பராமரிக்க வசதியும் இல்லை. இதனால் கடந்த 2016 ஆம் ஆண்டே மகளை கருணை கொலை செய்ய கூறி நெல்லை ஆட்சியரிடம் மனு அளித்திருந்தேன். ஆனால்  அந்த மனு மீது எந்த நடவடிக்கையும்  இல்லை. எங்களுக்கு உதவியும் கிடைக்கவில்லை. தற்போது தென்காசி ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளேன் என்று கண்ணீர் மல்க தெரிவித்திருந்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mercy Killing to daughter in tenkasi


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->