தீராத வயிற்று வலியால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட கூலித் தொழிலாளி.! - Seithipunal
Seithipunal


கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பகுதியில் கூலித் தொழிலாளியான வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக வயிற்றுவலி இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மறுபடியும் வெங்கடேசனுக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த வெங்கடேசன் வயிற்று வலி தாங்க முடியாமல் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த வெங்கடேசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துமனையில் அனுமதித்தனர்.

ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் பலனின்றி வெங்கடேசன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mercenary commits suicide by drinking poison due to chronic abdominal pain


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->