கஞ்சா போதையில்..கற்பழித்த 7 சிறுவர்கள்..! இறுதியில் நடந்த துயர சம்பவம்.!  - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஏர்வாடியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக 7 சிறுவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஏர்வாடி தர்காவிற்கு அருகில் காட்டுப்பள்ளி என்ற இடத்தில் கேரளாவைச் சேர்ந்த 19 வயது மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், கடந்த நான்காம் தேதி இரவு அந்தப்பெண் மாயமாகி இருக்கின்றார். 

தர்காவுக்கு அருகில் மயங்கிய நிலையில் அதிகாலையில் சென்றவர்களின் கண்களில் அவர் தென் பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணின் தந்தை இளம்பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகியுள்ளதாக ஏர்வாடி காவல்துறையில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினருக்கு அதே பகுதியைச் சேர்ந்த 14 முதல் 18 வயதுக்கு உட்பட்ட ஏழு சிறுவர்கள் கஞ்சா போதையில் அந்த இளம்பெண்ணை காப்பகத்திலிருந்து இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், அந்த சிறுவர்களை பிடித்து கீழக்கரை டிஎஸ்பி முருகேசன் தலைமையில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mentally challenged girl raped by 7 boys


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->