காதலித்து, திருமணம்.. ஜிம்முக்கு போன இடத்தில் கம்முனு இருக்காம பெண் செய்த வேலை.!
men request to police station bring up his wife
மதுரை மாவட்டத்தில் பெருங்குடி பகுதியில் ராஜேஷ் என்பவர் விமான நிலையத்தில் எக்ஸிகியூட்டிவ் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகின்றார். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பாக கனிமொழி என்ற பெண்ணை ராஜேஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
மூன்று வருடமாகியும் இவர்களுக்கு குழந்தை இல்லை. கனிமொழிக்கு கருப்பையில் நீர்க்கட்டி இருப்பது தெரியவந்துள்ளது. இதற்காக உடலை குறைக்க கனிமொழி ஜிம்மிற்கு சென்று உள்ளார். அங்கே யோகேஷ் கண்ணா என்பவர் கனிமொழிக்கு அறிமுகம் ஆகி இருக்கின்றார்.
அப்பொழுது கனிமொழிக்கும், அவருக்கும் நெருக்கமான உறவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து, அறிந்த கனிமொழியின் கணவர் ராஜேஷ் தனது மனைவியிடம் ஆத்திரமடைந்து கண்டித்து இருக்கிறார். எனவே, கோபத்தில் கனிமொழி யோகேசின் நண்பர்களின் உதவியோடு வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.
ராஜேஷ் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் என் மனைவியை திருப்பி அனுப்ப வேண்டுமென்றால் யோகேஷ் பணம் வேண்டும் என்று மிரட்டுகிறார். என் மனைவியை மீட்டு தாருங்கள் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
men request to police station bring up his wife