விபத்தினால் கால்முறிவு.. 6 மாத சிகிச்சை..! கட்டைப் பிரித்த போது காத்திருந்த அதிர்ச்சி.!
men left his leg due to bad treatment
கால் பகுதியில் ஏற்பட்ட முறிவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நபர் ஒருவர், கால் கட்டினை பிரித்த போது பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளார்.
தமிழகத்தில் உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரன். இவருக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதாக விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதற்காக அங்குள்ள ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையை சார்ந்த நபர்கள் மூலமாக, உள்ளூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். இந்த மருத்துவமனையில் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவரே இவருக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
சிகிச்சை பெற்று வந்த ராஜேஸ்வரன் சுமார் 6 மாதங்களுக்கு பின்னரும், அவரது காலில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதால், காலின் கட்டை பிரித்து பார்த்துள்ளார். அப்போது காலில் சீழ்பிடித்த இருப்பது தெரியவந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், மீண்டும் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும், ஏற்கனவே ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், அரசு மருத்துவமனைகளை விட தங்களுக்கென சொந்தமாக வைத்திருக்கும் தனியார் மருத்துவமனையில் அதிக நேரம் பணியாற்றி வருவதும், இதனால் ஏற்கனவே கர்ப்பிணி பெண் ஒருவர் பலியாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
men left his leg due to bad treatment