கிணற்றுக்கு அருகில் நின்ற போது எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த சோகம்.! சேலத்தில் பரிதாபம்.!
Men died in well
சேலம் மாவட்டத்தில் இருக்கும் சாத்தப்பாடி பகுதியில் முருகன் என்ற விவசாயி தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் மின்மோட்டார் வைத்திருந்த இடம் சேதமாகி இருந்தது. எனவே அந்த இடத்தை பராமரிக்க அவர் கிணற்றுக்கு அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்பொழுது முருகன் எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவருடைய மனைவி கயிறை எடுத்து கணவரை காப்பாற்ற முயற்சித்துள்ளார்.
அப்பொழுது கிணற்றுக்குள் கயிறை தூக்கி வீசி கயிற்றைப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று கத்தியுள்ளார். முருகனுக்கு சிறிதும் நீச்சல் தெரியாத காரணத்தால் கயிற்றை பிடிக்க முடியாமல் தண்ணீருக்குள் மூழ்கி விட்டார்.
பின்னர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்து முருகனை மீட்ட பொழுது அவர் சடலமாக கிடந்துள்ளார். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு இது பற்றி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.