கைல சூடு., காதுல ரத்தம்.. கருவேலங்காட்டில் கருகிய வாடை., சென்று பார்க்கையில் பேரதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தின் பட்டுக்கோட்டை அம்மன் நகர் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகளவு இருக்கும் பகுதியாகும். இந்த பகுதியின் கருவேலங்காடு பகுதியில் அரைகுறையாக எரிக்கப்பட்டு இருந்த ஆணின் பிரேதம் இருந்துள்ளது. 

இதனைப்பார்த்து அதிர்ச்சியான மக்கள், கிராம நிர்வாக அலுவலகருக்கு விஷயத்தை கூறியுள்ளனர். பின்னர் இவரது அழைப்பின் பேரில் பட்டுக்கோட்டை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். 

death seithipunalக்கான பட முடிவுகள்

அங்கு சென்ற காவல் துறையினர் சோதனை செய்ததில், பிரேதமாக கிடந்த நபரின் காதில் காயமும், இடது கையில் புகையினால் சூடும் வைக்கப்பட்டது போன்றும் இருந்துள்ளது. இவரது உடல் மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. 

அருகிலேயே மது பானம் மற்றும் நொறுக்குத்தீனிகள் இருந்துள்ளது. இதனையடுத்து இவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விசயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

men death in pattukottai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->