ஆசையாக இருக்கு என அழைத்த பெண்.! நேரில் சென்ற நபருக்கு இப்படி ஒரு சோதனையா?!  - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் செட்டிபாளையத்தில் வினோத் குமார் என்பவர் பிளக்ஸ் பேனர் அச்சடிக்கும் தொழில் செய்து வருகின்றார். இவருக்கு திருச்சி பகுதியை சேர்ந்த அகமத் நிஷா என்பவர் அறிமுகமானார். பின்னர் உங்களை நேரில் பார்க்க வேண்டும் ஆசையாக உள்ளது வரமுடியுமா என்று அழைத்துள்ளார். 

இதனை தொடர்ந்து, வினோத் குமார் அந்த பெண்ணை பார்க்க சென்றுள்ளார். அப்போது ஆட்டோவில் 4 பேர் கொண்ட கும்பல் வந்து வினோத்குமார் இடம் நீங்கள்தான் கடலூரில் இருந்து வந்தவரா என்று கேட்டதும் அதற்கு வினோத் குமார் ஆமாம் என்று பதில் கூறியவுடன் அவரை கடத்திச் சென்று அங்கிருக்கும் ஒரு வீட்டில் அடைத்து அவரிடம் ஒரு லட்சம் கேட்டு மிரட்டி இருக்கின்றனர். 

பின்னர் அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறித்துக் கொண்டு அவரை எம்ஜிஆர் சிலை அருகில் இருக்கும் ரவுண்டானாவில் விட்டு சென்றுள்ளனர். பின்னர் வினோத்குமார் கண்டோன்மெண்ட் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

men cheated by women in trichy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->