பிரியாணி வெறியரை பாதித்த கொரொனா, மருத்துவமனையில் நிகழ்ந்த அதிரடி சம்பவம்.! அச்சத்தில் உறைந்த மனைவி.!
Men attack hospital in singanallur
கோயம்புத்தூர் மாவட்டம் சிங்காநல்லூர் வரதராஜபுரம் பகுதியில் அமைந்துள்ள ஈ.எஸ்.ஐ ஹாஸ்பிடலில் கொரோனாவுள்ள 117 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு காலை, மாலை, மதியம் ஆகிய மூன்று நேரங்களில் கீரை போன்ற சத்தான உணவுகளை கொடுக்கப்பட்ட்ய் வருகிறது.
இந்த நிலையில், போத்தனூரை சார்ந்த கொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட 28 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவருக்கு அவருடைய மனைவி பிரியாணி கொண்டுவந்து கொடுத்து உள்ளார்.
அப்போது அந்த நபர் பிரியாணியை சாப்பிட முற்பட்ட போது, அங்கே பணியில் இருந்த செவிலியர்கள் சிலர் அனுமதி அளிக்க மறுத்தனர். ஆனால், அந்த நபரோ பிரியாணி சாப்பிட்டே ஆக வேண்டும் என உறுதியாக இருந்தும், ஹாஸ்பிடல் நிர்வாகம் அதற்கு மறுப்புத் தெரிவித்து விட்டது.
இதன்காரணமாக கோபமடைந்த அந்த நபர் ஹாஸ்பிடல் கண்ணாடியை கையால் உடைத்து உள்ளார். இது குறித்து சிங்காநல்லூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர் அந்த இளைஞரை வழக்குப் பதிந்து கைது செய்து உள்ளனர்.
English Summary
Men attack hospital in singanallur