விநாயகர் சதுர்த்தி ஊர்வலம், காஞ்சி சங்கரமடம் பகுதியில் உள்ள இறைச்சிகடைகளை மூட உத்தரவு..!
meet and Briyani shops was Closed at Vinayakar chathurthi
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இடையூறு ஏற்படாமல் இருக்க இரண்டு நாட்களுக்கு இறைச்சிகடைகளை மூட காவல் ஆய்வாளர் உத்தரவிட்டுள்ளது.
வருகின்ற 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடபட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை பொதுமக்கள் செய்து வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி அன்று வீடுகள், பொது இடங்கள் உள்ளிட்டவற்றில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து இரண்டு நாட்கள் கழித்து நீர்நிலைகளில் கரைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், சிவகாஞ்சி காவல் எல்லைக்குட்பட்ட செங்கழுநீரோடை வீதி, சங்கரமடம் பகுதிகளில் 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாப்பட இருப்பதாலும் 2.09.2022 மற்றும் 04. 09.2022ம் தேதி சிலைகள் கரைக்கபட இருப்பதாலும் அந்த நாட்களில் செங்கழுநீரோடை வீதி, சங்கரமடம் பகுதிகளில் செயல்படும் இறைச்சிகடைகள் மற்றும் பிரியாணிகடைகளை மூடி ஒத்துழைப்புதருமாறு காவல் ஆணையர் கேட்டு கொண்டுள்ளார்.
English Summary
meet and Briyani shops was Closed at Vinayakar chathurthi