மன உளைச்சலால் மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை..காவல்துறையினர் விசாரணை..! - Seithipunal
Seithipunal


மன உளைச்சலால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மோகனூரை சேர்ந்தவர் காயத்ரி. இவர் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவ ஐந்தாம் ஆண்டு படித்து வருகிறார்.  இவர் பயிற்சி மருத்துவராக திருவாரூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். அங்குள்ள கல்லூரி தங்கும் விடுதியில் தங்கி இருந்த அவரின் அறை நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. புதன்கிழமை முதல் அவர் பணிக்கு செல்லாததால் சந்தேகடைந்த அவரது தோழிகள் அறை கதவை தட்டியுள்ளனர்.

நீண்ட நேரமாகியும் அவர் கதவை திறக்காததால் சந்தேகமடியந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த அவர் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அவர் மன அழுத்ததில் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சொகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Medical college Student Committed Suicide in Thiruvarur


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->