சென்னை : மருத்துவக் கல்லூரி மாணவி 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை.! - Seithipunal
Seithipunal


சென்னை அருகே தனியார் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர், 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்பத்தூர் (ஸ்ரீபெரும்புதூர்) அருகே உள்ள தண்டலம் பகுதியில் சவீதா நிகர்நிலைப் பல்கலைக் கழகம் இயங்கி வருகிறது.

இந்த பல்கலைக்கழகத்தில் பல்வேறு வகையான மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளில் மாணவ -மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த கல்லூரியில் அம்பத்தூர், புதூர் பகுதியைச் சேர்ந்த சோனாலி (வயது 20) பி.எஸ்.சி சுகாதார அறிவியல் படிப்பை படித்து வந்தார்.

இந்நிலையில், சோனாலி செமஸ்டர் தேர்வு எழுதும்போது, தேர்வு அறையில் செல்போன் வைத்திருந்ததாக கூறி அவரை தேர்வு எழுதவிடாமல் தேர்வு கண்காணிப்பாளர் வெளியேற்றியதாக சொல்லப்படுகிறது.

மேலும், ஆசிரியர்கள் அவரை திட்டியதாகவும் சொல்லப்படுகிறது. தேர்வு நடந்த ஏழாவது மாடியிலிருந்து வெளியே வந்த சோனாலி மூன்றாவது மாடிக்கு வந்த போது, அங்கிருந்து திடீரென குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதில், அவருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருப்பெரும்பத்தூர் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து சோனாலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

medical collage student suicide


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->