மயிலாடுதுறை | வீடு புகுந்து இளம்பெண்ணை கடத்திச்சென்ற நாடககாதல் கும்பல்.! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறையில் நாடகக் காதல் கும்பலால் கடத்தப்பட்ட இளம்பெண்ணை மீட்ட போலீசார், இது சம்பந்தமாக நாடகக் காதலன் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில், இளம் பெண் ஒருவரை வீடு புகுந்து கடத்திச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன.

அந்த சிசிடிவி கட்சியில், பூட்டியிருந்த வீட்டுக்குள் நுழைந்த 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள், அத்துமீறி ஆயுதங்களுடன் வீட்டு கதவை உடைத்து உள்ளே இருந்த இளம் பெண் ஒருவரை தூக்கி செல்கின்றனர்.

அப்போது அந்த இளம் பெண்ணின் தாயாரும், அந்த இளம் பெண்ணின் சகோதரியும் கதறி அழுகும் காட்சிகள் அந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

மயில் அம்மன் நகரில் வசித்து வருபவர் விக்னேஸ்வரன். இவர் அந்த பகுதியை சேர்ந்த இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவரின் நடவடிக்கை சரி இல்லாத காரணத்தால் அந்த இளம் பெண் அவருடனான காதலை முறித்துக்கொண்டுள்ளார். 

ஆனால் விடாமல் விக்னேஸ்வரன் அந்த பெண்ணை தொடர்ந்து காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்தும், தகராறிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், சம்பவம் நடந்த அன்று இரவு பயங்கர ஆயுதங்களுடன் விக்னேஸ்வரன் மற்றும் அவர்களின் நண்பர்கள் சேர்ந்த ஒரு கும்பல் வீடு புகுந்து இந்த இளம் பெண்ணை கடத்தி சென்றுள்ளனர்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே, சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் கடத்தல் கும்பலை விழுப்புரம் விக்கிரவாண்டி அருகே சுற்றிவளைத்து பிடித்தனர். மேலும், அவர்களிடமிருந்து இளம் பெண்ணை மீட்ட போலீசார், கடத்தல் சம்பந்தமாக விக்னேஸ்வரன் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mayiladuthurai young woman kidnaped case aug


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->