#Breaking: தீரன் அதிகாரம் ஒன்று படத்தை மிஞ்சும் சீர்காழி இரட்டைக்கொலை.. பொதுமக்களே களத்தில் இறங்கி வடக்கன்ஸை பிடித்தனர்.!
Mayiladuthurai Seerkazhi Twice Murder and Gold Biscuit Robbery Case Peoples Capture North Indian Gang
சீர்காழியில் நகைக்கடை அதிபர் வீட்டில் இரட்டைக்கொலையை அரங்கேற்றிய வடமாநில கும்பல், 16 கிலோ தங்கத்தை கொள்ளையடித்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி பகுதியில் தங்க நகைக்கடை நடத்தி வருபவர் தன்ராஜ் சவுதாரி. இவரது மனைவி ஆஷா (வயது 45). இவர்களின் மகன் அகில் (வயது 28). இந்நிலையில், இன்று அதிகாலை நேரத்தில் இவர்களின் இல்லத்திற்கு 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வந்துள்ளது. இந்த கும்பல் வீட்டின் வாயிலை தட்டிய நிலையில், வீட்டின் கதவை திறந்ததும் உள்ளே நுழைந்த மர்ம கும்பல், ஆஷா மற்றும் அவரது மகன் அகிலை சரமாரியாக வெட்டிக்கொலை செய்து, வீட்டில் இருந்த 16 கிலோ தங்கத்தை கடத்தி சென்றுள்ளது.
மேலும், இவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த தன்ராஜுக்கும் சரமாரி அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதனையடுத்து இது தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து தன்ராஜை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆஷா மற்றும் அகிலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில், இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை எரம்கொண்டு வருகின்றார். மேலும், முதற்கட்ட தகவலாக இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் வடமாநில கும்பலாக இருக்கலாம் என்றும், வந்திருந்தவர்கள் வடமாநில இளைஞருக்கான அடையாளத்துடன் காணப்பட்டதாகவும், ஹிந்தி மொழியில் அவர்கள் பேசிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள எருகூர் கிராமத்தில் கொள்ளையடிக்கப்பட்ட தங்க கட்டிகளுடன் பதுங்கியிருந்த வடமாநில கொள்ளை கும்பலை சார்ந்த 3 பேரை பொதுமக்கள் சுத்திவளைத்து பிடித்துள்ளனர். பின்னர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, காவல் துறையினர் அதிகாரிகள் வசம் கொள்ளையர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்த கொள்ளை நடைபெற்ற 4 மணிநேரத்தில் கொள்ளைக்கும்பல் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. கொள்ளையர்களில் 3 பேர் வடமாநிலத்தை சார்ந்தவர்கள் என்பது உறுதியாகியுள்ளது. தீரன் அதிகாரம் ஒன்று திரைப்பட பாணியில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tamil online news Today News in Tamil
English Summary
Mayiladuthurai Seerkazhi Twice Murder and Gold Biscuit Robbery Case Peoples Capture North Indian Gang