#Breaking: சீர்காழியில் இரட்டைக்கொலை.. 16 கிலோ தங்கம் கொள்ளை... 5 பேர் கொண்ட வடமாநில கும்பல்?..! - Seithipunal
Seithipunal


சீர்காழியில் நகைக்கடை அதிபர் வீட்டில் இரட்டைக்கொலையை அரங்கேற்றிய வடமாநில கும்பல், 16 கிலோ தங்கத்தை கொள்ளையடித்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி பகுதியில் தங்க நகைக்கடை நடத்தி வருபவர் தன்ராஜ் சவுதாரி. இவரது மனைவி ஆஷா (வயது 45). இவர்களின் மகன் அகில் (வயது 28). இந்நிலையில், இன்று அதிகாலை நேரத்தில் இவர்களின் இல்லத்திற்கு 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வந்துள்ளது. 

இந்த கும்பல் வீட்டின் வாயிலை தட்டிய நிலையில், வீட்டின் கதவை திறந்ததும் உள்ளே நுழைந்த மர்ம கும்பல், ஆஷா மற்றும் அவரது மகன் அகிலை சரமாரியாக வெட்டிக்கொலை செய்து, வீட்டில் இருந்த 16 கிலோ தங்கத்தை கடத்தி சென்றுள்ளது. 

மேலும், இவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த தன்ராஜுக்கும் சரமாரி அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதனையடுத்து இது தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து தன்ராஜை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ஆஷா மற்றும் அகிலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில், இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை எரம்கொண்டு வருகின்றார். மேலும், முதற்கட்ட தகவலாக இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் வடமாநில கும்பலாக இருக்கலாம் என்றும், வந்திருந்தவர்கள் வடமாநில இளைஞருக்கான அடையாளத்துடன் காணப்பட்டதாகவும், ஹிந்தி மொழியில் அவர்கள் பேசிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mayiladuthurai Seerkazhi Gold Jwelry Owner Tanraj Chaudary House Robbery and Murder


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->