தென்காசி, செங்கல்பட்டு போலவே எங்க ஊரையும் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்., போராட்டத்தில் இறங்கிய பொதுமக்கள்!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஏற்கனவே 32 மாவட்டங்கள் இருந்த நிலையில் புதிதாக 33வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி அறிவிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து நேற்று தென்காசி மற்றும் செங்கல்பட்டு ஆகிய இரு புதிய மாவட்டங்களை சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதேபோல கும்பகோணம்த்தையும் விரைவில் தனி மாவட்டமாக அறிவிக்க போவதாக அமைச்சர் ஆர் வி உதயகுமார் சட்டப்பேரவையில் நேற்று உறுதியளித்திருந்தார்.

இதனை தொடர்ந்து தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறையும் தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி அப்பகுதி பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் மயிலாடுதுறை குத்தாலம் செம்பனார்கோயில் தரங்கம்பாடி பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன சீர்காழியில் பகுதிகளில் நாளை கடையடைப்பு  நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mayiladuthurai people protest


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->