மயிலாடுதுறையில் ஓ.என்.ஜி.சி நிறுவன எரிவாயு குழாய் வெடித்து விபத்து.. மக்கள் பீதி.!! - Seithipunal
Seithipunal


எரிவாயு சேமிப்பு கிடங்கு குழாய் வெடித்து பெரும் பீதியை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை அருகே விளைநிலத்தில் அமைக்கப்பட்ட ஓ.என்.ஜி.சி கெயில் நிறுவனத்திற்கு சொந்தமான எரிவாயு குழாய் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் உள்ள மேமாத்தூர் பகுதியில் விளை நிலத்தில் அமைக்கப்பட்ட ஓ.என்.ஜி.சி கெயில் நிறுவனத்திற்கு சொந்தமான எரிவாயு சேமிப்பு கிடங்கு குழாய் வெடித்துள்ளது.

எரிவாயு குழாய் வெடித்து மணலுடன் கலந்து புகை வெளியேறுவதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். மேலும், முன்னதாக விவசாய நிலத்தில் எரிவாயு குழாய் அமைக்க மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

டெல்டா நிலங்களில் எரிவாயுக் குழாய் அமைக்கும் பணியை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று மக்களிடையே கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mayiladuthurai ONGC Pipe line fire accident


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->