காதல் திருமணம் செய்தும், மனைவியின் மீது சந்தேகம்.. திருமணம் முடிந்த சில வருடங்களில் அரங்கேறிய கொடூரம்.!!
Mayiladuthurai Love married girl murder by husband due to doubts
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தலாம் அசிக்காடு கிராமத்தை சார்ந்தவர் ஐயப்பன் (வயது 28). இவர் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இதே பகுதியை சார்ந்த அகிலா (வயது 27) என்ற பெண்மணியை, கடந்த 8 வருடத்திற்கு முன்னதாக காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இவர்கள் இருவருக்கும் ஆறு வயது மகன் மற்றும் நான்கு வயது மகள் உள்ள நிலையில், ஐயப்பன் மது பழக்கத்திற்கு அடிமையாகி இருந்துள்ளார். இதனால் கணவன் - மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று காலை அகிலா வீட்டில் மயக்கமடைந்த நிலையில் இருப்பதாக ஐயப்பனின் குடும்பத்தினர், அகிலாவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து இருக்கின்றனர். தகவலை அறிந்த அகிலாவின் பெற்றோர்கள் பதறியடித்து வந்து பார்த்துள்ளனர்.
இதில் அகிலா மயக்கமடைந்த நிலையில் இருந்துள்ளார். அகிலாவை மீட்டு அங்குள்ள மயிலாடுதுறை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அகிலா இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அகிலாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், மனைவியின் மீதான நடத்தை சந்தேகத்தில் கொலை அரங்கேறியுள்ளது தெரியவந்துள்ளது. இந்த சமப்வம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Mayiladuthurai Love married girl murder by husband due to doubts