மயிலாடுதுறை: சிறுமிகளிடம் ஆ., படங்களை காண்பித்து பாஜக பிரமுகர் அட்டகாசம்.. புகார் கொடுத்த தந்தைக்கு கத்திக்குத்து.! - Seithipunal
Seithipunal


சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரின் மீது புகார் அளித்த பெற்றோருக்கு கத்திக்குத்து தாக்குதல் நடத்திய விஷயம் தொடர்பாக, ஏற்கனவே பாலியல் குற்றச்சாட்டில் சிறையில் இருக்கும் பாஜக பிரமுகரின் மகன்கள் உட்பட 4 பேரை கைது செய்த காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். 

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் கோழிக்குத்தி கிராமத்தை சார்ந்தவர் மகாலிங்கம் (வயது 60). இவர் பாஜக பிரமுகராக இருந்து வரும் நிலையில், ஒரே குடும்பத்தை சார்ந்த 11 வயது மற்றும் 7 வயது சிறுமிகள் உட்பட அப்பகுதியை சார்ந்த பல சிறுமிகளிடம் தனது அலைபேசியில் உள்ள ஆபாச படத்தை காண்பித்து, அதனைப்போல தன்னுடன் செயல்பட வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் மகாலிங்கத்தை மீது குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்த மகாலிங்கத்தின் மனைவி ராஜலட்சுமி, புகார் அளித்துள்ள சிறுமியின் தந்தைக்கும் - தங்களுக்கும் இடையே இடதகராறு மற்றும் பணத்தகராறு உள்ளது என்றும், இதனால் பொய் புகார் அளித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து ராஜலட்சுமி புகார் அளித்த நிலையில், சிறுமிகளின் தந்தை பாஜக பிரமுகர் வீட்டின் வழியாக தனது வீட்டிற்கு சென்றுகொண்டு இருந்துள்ளார். இதன்போது, மகாலிங்கம் - ராஜலட்சுமியின் 2 மகன்களான ஜவகர் மற்றும் சுதாகர் உட்பட 4 பேர், சிறுமியின் தந்தையை இடைமறித்து கத்தி மற்றும் கம்பால் அடித்து தாக்கியுள்ளனர். இதனை தடுக்க வந்த சிறுமியின் உறவினரின் ஒருவருக்கும் கத்திக்குத்து விழுந்துள்ளது.

இதனால் பதறிப்போன அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து இருக்கும்பலையும் கலைத்து, படுகாயமடைந்தவர்களை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்துள்ளனர். பின்னர், இந்த விஷயம் தொடர்பாகவும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் ஜவகர், சுதாகர் உட்பட 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mayiladuthurai Kuthalam Child Sexual Abuse Case Arrested BJP Worker Attack Child Father to Withdrawn Case


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->