6 சிறுமிகளிடம் ஆபாச படத்தை காண்பித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கிழட்டு காமுகன்.. மயிலாடுதுறையில் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


குத்தாலத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காமுக முதியவனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் அருகேயுள்ள கிராமம் கோலிக்குத்தி. இந்த கிராமத்தை சார்ந்த வயோதிகன் மகாலிங்கம். சம்பவத்தன்று கோலிக்குத்தி கிராமத்தை சார்ந்த 6 சிறுமிகள் ஒன்றாக சேர்ந்து விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். 

இதன்போது, சிறுமிகளை அழைத்த காமுகன் மகாலிங்கம், தனது அலைபேசியில் இருந்த ஆபாச படங்களை காண்பித்து சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு இருக்கிறான். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமிகள் அலறியபடி தங்களின் இல்லத்திற்கு சென்றுள்ளனர். 

மகள்கள் பதற்றத்துடன் வந்துள்ளதை கண்டு பதறிப்போன பெற்றோர்கள், சிறுமிகளிடம் விசாரணை செய்தததில் மகாலிங்கம் சிறுமிகளுக்கு செல்போனில் ஆபாச படத்தை காண்பித்து பாலியல் தொல்லை அளித்தது உறுதியானது. 

இதனையடுத்து, சிறுமிகளின் பெற்றோர்கள் அங்குள்ள குத்தாலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறை அதிகாரிகள் மகாலிங்கத்தை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mayiladuthurai Kuthalam 6 Child Girls Sexual Tortured by Aged Person


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->