தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லாத முதல் மாவட்டம் இது தானாம்..!
Mayiladuthurai is the first district in Tamil Nadu to be free of corona infection
தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லாத முதல் மாவட்டம் என்ற தகுதியை மயிலாடுதுறை பெற்றுள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டாடுகளுக்கு முன் கொரோனா தொற்று பரவ தொடங்கியுள்ளது. பல கட்டுபாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் தற்போது தமிழகத்தில் சில மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைந்து வந்துள்ளது.
இந்நிலையில், முற்றிலும் கொரோனா பாதிப்பு இல்லாத தமிழகத்தின் முதல் மாவட்டம் என்ற அந்தஸ்தை மயிலாடுதுறை மாவட்டம் பெற்றுள்ளது. மாவட்டம் முழுவதும் கடந்த ஒருவாரமாக புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.
மேலும், சிகிச்சை பெற்று வந்த அனவரும் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை ஒட்டுமொத்தமாக 26,496 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
English Summary
Mayiladuthurai is the first district in Tamil Nadu to be free of corona infection