கஞ்சா பொட்டலத்துடன் போலீசிடம் சிக்கிய சிறுவர்கள்.. பரபரப்பு வாக்குமூலம்.!
Mayiladuthurai children kanja sales police investigation
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழியில் கோவில்களில் திருடி கஞ்சா வாங்குவதாக 2 சிறுவர்களிடம் காவல்துறையினர் வாக்குமூலம் பெற்ற அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே கஞ்சா பழக்கம் அதிகரித்து வருவதாக ஏற்கனவே புகார் எழுந்தன. இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், எதர்ச்சையாக இரண்டு சிறுவர்களை கண்ட காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர். அவர்களிடம் செய்த சோதனையில் கையில் ரூ.500 மற்றும் கஞ்சா பொட்டலம் இருந்துள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை செய்கையில், கோவிலில் இருக்கும் சாமி சிலையின் கழுத்தில் இருந்த தாலி மற்றும் அங்கிருந்த உண்டியலை திருடி விக்கி மற்றும் அரவிந்தன் ஆகியோரிடம் கொடுப்போம்.
அவர்கள் கைச்செலவுக்கு பணம் மற்றும் கஞ்சாவை கொடுப்பார்கள் என்று கூறியுள்ளனர். பின்னர் சிறுவரின் பெற்றோர்களை அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்துவிட்டு, சிறுவன் குறிப்பிட்ட மயிலாடுதுறையை சேர்ந்த விக்கி மற்றும் அரவிந்தன் ஆகியோரை தேடி வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Mayiladuthurai children kanja sales police investigation