சொந்த மகளை சிறுமி என்றும் பாராது பாலியல் பலாத்காரம்.. கர்ப்பிணியாக சிறுமி..!! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறையில் பெற்ற மகளை கர்ப்பமாக்கிய காமுக தந்தையை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள செம்பனார்கோவில் ஆகூரை சார்ந்த 14 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமியை அவரது காமுக தந்தை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். 

மேலும், இது குறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளான். இதனால் சிறுமி விஷயத்தை வெளியே கூறாமல் இருந்து வந்த நிலையில், சிறுமிக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. 

சிறுமியை சோதனை செய்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதை அறிந்துள்ளனர். இதனையடுத்து காவல் துறையினருக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். 

இதில் சிறுமி தந்தையால் மிரட்டி பாலியல் பலாத்காரத்திக்கு உள்ளாக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிறுமியின் தந்தையை கைது செய்த காவல் துறையினர், சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mayiladuthurai Child sexual abuse by father


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->