எஸ்ரா சற்குணம் மீது பாய்ந்த பாஜகவினர்.! எடுக்கப்பட்ட அதிரடி முடிவு.!!
may be case fill on esra sargunam
மயிலாடுதுறை பாஜகவினர் சர்ச்சைக்குரிய வகையில் எஸ்ரா சற்குணம் பேசியிருப்பதாக வழக்கு தொடுத்துள்ளார்.
மயிலாடுதுறை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இதுகுறித்த புகார் அளித்த மனுவில், "கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த எஸ்றா சற்குணம் அரசியல்வாதியாகவும், பாதிரியாராகவும் செயல்பட்டு வருகிறார். அவர், தமிழகத்தில் தொடர்ந்து அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட சாதியை பற்றி அவதூறாக பேசி கலவரத்தை தூண்ட முயற்சித்தார்.
இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி அவர், இந்து மதத்தினரை புண்படுத்தும் வகையிலும், அதன் மூலம் கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசி உள்ளார். அதில் ‘இந்து மதமே இல்லை, இந்துக்களை முகத்தில் குத்தி காயப்படுத்த வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். அவருடைய பேச்சு சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி வருகிறது.
தமிழகத்தில் கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். " என கூறப்பட்டிருந்தது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி இது குறித்த வழக்கு விசாரணை 25-ந் தேதி நடக்குமென தெரிவித்துள்ளார்.
English Summary
may be case fill on esra sargunam