10ம் வகுப்பு மாணவனுடன் பயிற்சி ஆசிரியை திருமணம்.. குடும்பத்தினர் எதிர்பால் தற்கொலை முயற்சி..! - Seithipunal
Seithipunal


17 வயது சிறுவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம் மழவராயநல்லூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அந்த பள்ளியை பக்கத்து ஊரை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர் பயிற்சி ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தார்.

பத்தாம் வகுப்பிற்கு பாடம் எடுத்த அந்த ஆசிரியைக்கு மாணவனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்த விவகாரம் இருவரும் வீட்டிற்கும் தெரிய வரவே அவர்கள் இருவரையும் கண்டித்துள்ளனர்.

ஆனால், இதனை கண்டுகொள்ளாத அந்த மாணவரும் ஆசிரியையும் கடந்த அக்டோபர் மாதம் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டுள்ளனர். இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் அவர்களின் எதிர்ப்பு வலுக்கவே தற்கொலை  செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர்.

இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அந்த ஆசிரியை குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Married to a training teacher with a 10th grade student


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->