வீடு புகுந்து இளம் தம்பதியினர் வெட்டி கொலை..5 மாத குழந்தையின் கதறல்.! பின்னணி என்ன.?  - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தில் வீடு புகுந்து இளம் தம்பதியை மர்மநபர்கள் சிலர் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது.

தமிழகத்தின் நாமக்கல் பேருந்து நிலையம் அருகில் பழ வியாபாரம் செய்து வருபவர் விமல் ராஜ். இவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வீசாணத்தைச் சேர்ந்த அனிதா என்னும் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 5 மாத குழந்தை உள்ளது. இந்த நிலையில் இவர்கள் அனிதாவின் தாய், தந்தையுடன் வாழ்ந்து வந்தார்கள். 

இந்த நிலையில் நேற்றிரவு வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் விமல்ராஜ், அனிதா மற்றும் அவரது தந்தை கருப்பசாமியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டான். பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய அனிதாவின் தாய் கலாவதி, மகள் மற்றும் மருமகன் உயிரிழந்து கிடப்பதையும், அருகாமையில் 5 மாத குழந்தை அழுது கொண்டு இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

Image result for murder seithipunal

மேலும் உயிருக்கு போராடி கொண்டிருந்த கணவர் கருப்பசாமியை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்கள். இது குறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருளரசு, மர்ம நபர்களால் நடத்தப்பட்ட இந்த கொலை குறித்து விசாரணை நடத்தினர்.

இதை தொடர்ந்து, இளம் தம்பதியின் உடலைக் உடற்கூறாய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன் விரோதத்தால் கொலை நடந்ததா என்றும், கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா என்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

married couple murder in namakal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->