மனைவி சம்மதத்தோடு வேறு பெண்ணுடன் தொடர்பு..! - காத்திருந்த அதிர்ச்சி..!
married a 2nd wife with permission of 1st wife
ராமநாதபுரத்தில் முதல் மனைவியின் சம்மதத்தை பெற்று இரண்டாவது திருமணம் செய்த கணவர் தனது முதல் மனைவியைக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சேதுபதி என்பருக்கு ராணி என்ற மனைவி இருக்கின்றார். ராணிக்கும், சேதுபதிக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றது. ஆனால், குழந்தை பிறக்கவிலை. இதன் காரணமாக கணவரின் மீது இருக்கும் அதீத அன்பால் சேதுபதி இரண்டாவது திருமணம் செய்து கொள்ள ராணி சம்மதித்து முன்னின்று திருமனத்தையும் நடத்தி வைத்து இருக்கின்றார்.
ஆனால், திருமணத்திற்கு பின்னர் சேதுபதி இரண்டாவது மனைவியின் வீட்டிலேயே இருந்துகொண்டு முதல் மனைவியை சற்றும் கவனிக்காமல் அன்றாட செலவுகளுக்குக் கூட பணம் கொடுக்காமல் அலட்சிய படுத்தியுள்ளார். இதன் காரணமாக தனக்கு சொத்தில் பங்கு வேண்டும் என்று ராணி கேட்டுள்ளார்.
ஆனால், சேதுபதி இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இருவருக்குள்ளும், பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று வழக்கம் போல ராணி மீண்டும் சொத்து பிரச்சனை குறித்து கேள்வி எழுப்ப ஆத்திரமடைந்த சேதுபதி கத்தியை எடுத்து ராணியை கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
married a 2nd wife with permission of 1st wife