கொரோனா பாசிட்டிவ் : தனியார் மருத்துவமனையில் மனுஷ்யபுத்திரன் அனுமதி!
Manushyaputhiran admitted in hospital tested Covid19 positive
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று மட்டும் 4,549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,56,369 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை இல்லாத அளவாக பாதிப்பு இருந்தது போல, குணமடைந்தோர் எணிக்கையும் இன்று 5,106 பேர் டிஸ்சார்ஜ் ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1,07,416 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மொத்தம் 69 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,236 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக மீண்டும் 4 ஆயிரத்தைக் கடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் கொரோனா உறுதி செய்யப்பட்டு, திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
English Summary
Manushyaputhiran admitted in hospital tested Covid19 positive