மணிகண்டன் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம்.! சிசிடிவி காட்சிகள் வெளியீடு.! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்லூரி மாணவர் மணிகண்டன் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டபோது வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளார். எனவே மணிகண்டனை தேடி பிடித்த காவல்துறை அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். 

விசாரணை முடிந்து மணிகண்டன் வீடு திரும்பியவுடன் திடீரென்று உயிரிழந்துள்ளார். எனவே மணிகண்டன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் காவல்துறையினர் தாக்கியதால் தான் அடிபட்டு மணிகண்டன் உயிரிழந்துவிட்டதாக மறியல் போராட்டம் செய்து வருகின்றனர். மணிகண்டனின் உடல் பரிசோதனை செய்யப்பட்டது.

ஆனால் அவரது உறவினர்கள் யாரும் உடலை வாங்க வில்லை. எங்களுக்கு ஒரு கோடி இழப்பீடு கொடுத்தால்தான் உடலை வாங்குவோம் என்று தெரிவித்துள்ளனர். தற்போது மாணவர் மணிகண்டன் உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருக்கின்றது. 

இத்தகைய நிலையில், காவல்துறையினர் அடித்து உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் போலிஸ் ஸ்டேஷனின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டு இருக்கின்றது. அந்த காட்சியில், கல்லூரி மாணவன் மணிகண்டனை காவல்துறையினர் யாரும் தாக்கியதாக காட்சிகள் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Manikandan death CCTV video viral


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->