மைனர் குஞ்சு மணியை வெட்டிய வழக்கில், பழிக்கு பழி கொலை?.. மானாமதுரையில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


நிபந்தனை ஜாமினில் கையெழுத்து போட வந்த ரவுடி சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. 

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை பகுதியைச் சார்ந்தவர் மணி. இவனை மைனர் மணி என்றால் ஊருக்குள் தெரியாத ஆளே இல்லை என்று கூறப்படுகிறது. இவன் கடந்த ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி மர்ம கும்பலால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டான். 

இந்த வழக்கில் 9 பேர் குற்றவாளிகளாக கைது செய்யப்பட்ட நிலையில், குற்றவாளிகள் நிபந்தனை ஜாமினில் வெளியாகியுள்ளனர். இவர்களில், அக்னி ராஜா என்பவன் காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளான். 

இந்த நிலையில், அக்னி ராஜாவை வழிமறித்த மர்ம கும்பல், பயங்கர ஆயுதத்தால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளது. மைனர் மணியின் கொலைக்கு பழிவாங்க இந்த கொலை நடந்திருக்கலாம் என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Manamadurai Rowdy Murder Revenge Murder Police Investigation 6 March 2921


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->