மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெயரில் 97 லட்சம் மோசடி.. போலி ஆவணம் தயாரித்த மேலாளர் பணியிடை நீக்கம்...!
Manager arrested in Vellore
மகளிர் சுய உதவிக் குழு பெயரில் போலி ஆவணம் தயாரித்து 97 லட்சம் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை குடியாத்தத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் கடன்கள் வழங்கப்படுகிறன.
இந்த வங்கியில் 2018-19 ஆம் ஆண்டுகளில் இந்த வங்கியில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு வழங்கிய கடன்களில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
இதனை அடுத்து, கூட்டுறவு சங்க தணிக்கை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சுமார் 97 லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மோசடியில் கிளை மேலாளர் உமா மகேஸ்வரி மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெயரில் போலி ஆவணம் தயாரித்து கடன் பெற்றது தெரியவந்தது.
இதனை அடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.அவரை பணிநீக்கம் செய்து வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் வங்கி தொடர்புடைய பொதுமக்கள் அவரை தொடர்பு கொள்ள வேண்டாம் எனவும் கேட்டு கொண்டுள்ளார்.
English Summary
Manager arrested in Vellore