தூங்குவது போல் நடித்து மர்ம நபர் செய்த தகாத வேலை! சிசிடிவியில் பதிவான பகீர் காட்சி!!
man theft caught in CCTV footage
வேலூர் ஏலகிரி பகுதியை சேர்ந்தவர் பவானி என்பவர் இவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் பவானியை காண, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த அவரது உறவினர்கள் 5 பேர் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அப்போது மருத்துவமனையில் இரவு நேரத்தில் உறவினர்கள் வார்டு வெளியே உறங்கிக்கொண்டு இருந்தனர்.
அந்த சமயத்தில் மர்மநபர் ஒருவர் மருத்துவமனைக்குள் வருகிறார் அவர் தூங்கி கொண்டிருந்தவர்களின் அருகில் படுத்து தூங்குவது போல நடித்து அவர்களிடமிருந்து செல்போன் மற்றும் 15 ஆயிரம் பணம் ரொக்கத்தை கொள்ளை அடித்துள்ளார்.
அதன் பின்னர், அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பித்து சென்று விடுகிறார். இந்த காட்சி மருத்துவமனையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது தொடர்ந்து உறவினர் ஒருவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
man theft caught in CCTV footage