சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த காமகொடூரன்.. 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு..!
Man sentenced to 30 years in prison for kidnapping and sexually abusing a girl
சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 30 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்தது.
கரூர் மாவட்டம், பொருந்தலூர் பகுதியில் வசித்து வரும் 14 வயது சிறுமியை அதே பகுதியை பாரதியார் என்பவர் கடந்த 2019ம் ஆண்டு கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.
சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் அவரை கைது செய்தனர். அவர் ஜாமீனில் வெளிவந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது தீர்ப்பளித்த மகிளா நீதிமன்றம் பாரதியாருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும் 60 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
English Summary
Man sentenced to 30 years in prison for kidnapping and sexually abusing a girl