பனியன் நிறுவன ஊழியர் கொலை.. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு.. திருப்பூர் அருகே பரப்பரப்பு..! - Seithipunal
Seithipunal


இளைஞர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் தண்ணீர்பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் கோபால். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.  இவர் சின்னக்கரையில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில்  வேலை செய்து வருகிறார்.

சம்பவதன்று, அவர் வேலை முடித்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது அவரின் இருசக்கர வாகனத்தை வழிமறித்த மூவர் அவரை கத்தியால் சரமாரியமாக குத்திவிட்டு தப்பி சென்றனர். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவரை கொலை செய்தவர் யார் என்பது குறித்து விசாராணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Man murder Near Thiruppur


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->