ஒரே பெண்ணை காதலித்த இரண்டு நண்பர்கள்.. இரத்த வெள்ளத்தில் முடிந்த காதல் காவியம்.. திண்டுக்கல்லில் பயங்கரம்.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சாலையூர் கிராமத்தை சார்ந்தவர் மணிகண்டன். இவரது நண்பர் அஜித். இவர்கள் இருவரும் சாலையூரில் இருக்கும் வெல்டிங் கடையில் பணியாற்றி வந்துள்ளனர். இந்த நிலையில், இவர்கள் இரண்டு பெரும் ஒரு பெண்மணியை காதலித்து வந்துள்ளனர். 

ஆனால், அதே பெண்மணியை மணிகண்டனிற்கு திருமணம் செய்து வைக்க இரண்டு வீட்டாரும் பேசி முடித்துள்ளனர். நண்பர்களின் காதல் காவியம் அறியாது பெற்றோர்கள் களத்தில் இறங்கிய நிலையில், அஜித் தனது நண்பனை அங்குள்ள காட்டுப்பகுதிக்கு மது அருந்த அழைத்து சென்றுள்ளான். 

இதனையடுத்து மணிகண்டனிற்கு அதிக போதை ஏற்பட்டதும், அஜித்தும் - அவரது மற்றொரு நபரும் மணிகண்டனை கழுத்தறுத்து கொலை செய்துள்ளனர். கொலையையும் செய்துவிட்டு, இரத்தம் படிந்த ஆடையுடன் சுற்றித்திரிந்த அஜித்தை, அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். 

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல் துறையினர் அஜித் மற்றும் அவனது நண்பனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Man Murder IN Dindigul due to two boys love one girl


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->