உல்லாசத்திற்கு மறுத்த மனைவி கொடூர கொலை.. கணவன் தற்கொலை முயற்சி.. வேலூரில் பகீர் சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை அருகேயுள்ள குடியான்குப்பம் பகுதியை சார்ந்தவர் சங்கர் (வயது 40). இவர் டைல்ஸ் பாதிக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் விமலா (வயது 29). இவர்கள் இருவரும் விவகாரத்திற்கு பின்னர் இரண்டாவதாக மனம் முடித்துக்கொண்ட நபர்கள் ஆவார்கள். 

இவர்கள் இருவருக்கும் நான்கு வயதுடைய மதுஸ்ரீ என்ற மகன் உள்ள நிலையில், கணவன் - மனைவிக்கு இடையே அவ்வப்போது குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினத்தின் போது இரவு நேரத்தில் விமலா உறங்கிக்கொண்டு இருந்துள்ளார். இந்த சமயத்தில், சங்கர் தனது மனைவியை தாம்பத்தியத்திற்கு அழைத்துள்ளார். 

இதற்கு விமலா மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த சங்கர் அதிகாலை நேரத்தில் உறங்கிய விமலாவின் தலையில் கல்லைப்போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர் காவல் துறையினரின் விசாரணைக்கு பயந்து, மனைவியை கொலை செய்த கல்லாலேயே தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

இதனையடுத்து காலையில் எழுந்த குழந்தை தாயை தேடவே, தாய் இரத்த வெள்ளத்தில் இருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி அழுததை அடுத்து, அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து உள்ளே சென்று பார்க்கையில் விபரீதம் புரிந்துள்ளது. பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், கணவனை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man kills wife due to could not come enjoy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->