#கரூர் || பூஜைக்கு தீர்த்தம் எடுக்க சென்றவருக்கு நேர்ந்த சோகம்..!
Man drowns into water
ஆற்றில் தீர்த்தம் எடுக்க முயன்ற நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், கூடலூர் பகுதியில் தொம்ப கருப்பண்ணசாமி கோவில் திருவிழா நடந்து வருகிறது. இந்த திருவிழாவிற்கு தீர்த்தம் எடுப்பதற்காக ஏராளமான பக்தர்கள் நேற்று மதியம் ஈரோடு மாவட்டம் கொடுமுடி மணல்மேடு பகுதியில் உள்ள காவிரி ஆற்றுக்கு சென்றனர்.
அப்போது பக்தர்களுடன் வந்த விஜயகுமார் ஆற்றில் எதிர்பாராராதவிதமாக தவறிவிழுந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பக்தர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். அவரை மீட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்தந்துவிட்டதாக் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்தகாவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.