அடக்கம் செய்த மகனின் உடலைத் தோண்டி எடுத்த தந்தை! வெளியான பகீர் தகவல்!!
man death or murder investigation
ஆரணியை அடுத்துள்ள கொங்கராம்பட்டு என்னும் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான மாணிக்கவேலின், இளைய மகன் சதீஷ்குமார். இவருக்கும் நித்யா என்ற பெண்ணுக்கும் திருமணம் முடிந்து பெங்களூரில் வசித்து வந்தனர். பெங்களூரு விமான நிலையத்தில் சதீஷ்குமார் செக்யூரிட்டியாக வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஜனவரி மாதம் 17ம் தேதி சதீஷ்குமார் மாரடைப்பால் இறந்துவிட்டதாக அவரது மனைவி நித்யா தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து, அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அப்போது சதீஷ்குமாரின் உடலில் காயங்களுடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த ஜனவரி 22ம் தேதி மகன் சதீஷ்குமார் மரணத்தில் அவரது தந்தைக்கு சந்தேகம் இருப்பதாக கூறி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
எனவே, அவரது உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யவேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து, போலீசார் முன்னிலையில் சதீஷ்குமார் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பட்டது. சதீஷ்குமாரின் மனைவி நித்யா பேச்சில் முரண் உள்ளாதாகவும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இது கொலையா? இல்லையா? என்பது தெரியவரும் என சதீஷ்குமாரின் சகோதரர் சரவணன் கூறியுள்ளார்.
English Summary
man death or murder investigation