மின்சாரம் தாக்கி பலியான தொழிலாளி, கோயம்புத்தூர் அருகே நிகழ்ந்த சோகம்..!
Man Death in Coimbatore
கோயம்புத்தூர் மாவட்டம், வடமலை பாளையம் காலனிபகுதியை சேர்ந்தவர் ஆறுசாமி. இவர் அந்த பகுதியில் உள்ள தோட்டத்தில் வேலை செய்து வருகிறார். சம்பவதன்று, வழக்கம் போல ட்ஹோட்டத்திஏகு சென்ற அவர் நீர்பாய்ச்சுவதற்காக அங்குள்ள மின்மோட்டாரை இயக்கியுள்ளார். அப்போது எதிரபாராத விதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியது.
ஒரு மணி நேரம் கழித்து வந்த அந்த தோட்டத்தின் உரிமையாளர் வந்து பார்த்த போது அவர் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.