கிருஷ்ணகிரியில் கொரோனவால் பலியான நபர்! வெளியான அதிர்ச்சி காரணம்!! - Seithipunal
Seithipunal


உலக நாடுகளில் பரவி வரும் கரோனா வைரஸ் தாக்கம் தற்போது இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தமிழகத்திலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தோற்று பரவுவதை தடுக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்றுவந்த நபர் உயிரிழந்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காவேரிபட்டினம் அடுத்துள்ள வள்ளிப்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் சக்திவேல் இவருக்கு வயது 43. இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார்.

கடந்த சில நாட்களாக சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளார். இதை தொடர்ந்து காவேரிப்பட்டணம் சுற்றுவட்டாரத்தில் மருத்துவ அலுவலர் ஹரிராம் தலைமையில் 31 பேர் கொண்ட குழுவினர் கிராமத்தில் முகாமிட்டுள்ளனர்.

மேலும், அங்கு யாருக்காவது கொரோனா வைரஸ் நோய் பரவி உள்ளதா என்று பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் உயிரிழந்த தொழிலாளி சக்திவேல் வயிற்றுப்போக்கால் உயிரிழந்ததாகவும், அவர் மது போதைக்கு அடிமையாக இருந்ததாகவும் மருத்துவ சோதனையில் தெரிவித்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Man death due to corona virus in krishnagiri


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->