தண்ணீர் தொட்டி சுத்தம் செய்ய சென்றவருக்கு நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தவர் மூச்சுத்திணறி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் பனைக்குளம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பகுதியில் தங்கி கட்டிட வேலை மற்றும் தண்ணீர் தொட்டி சுத்தம் செய்யும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள வீட்டில் தண்ணீர் தொட்டி சுத்தம் செய்யும் பணியில் அவர் ஈடுபட்டார்.

 அப்போது அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார் இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

 இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தண்ணீர் தொட்டி சுத்தம் செய்யும் பொழுது தொழிலாளி மூச்சுத்திணறி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Man Dead Near Krishnagiri


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->