வளர்ப்பு நாயுடன் சடலமாக மீட்கப்பட்ட டைலர்... மனைவி இறந்த துக்கத்தில் எடுத்த விபரீத முடிவு..! - Seithipunal
Seithipunal


மனைவி இறந்த துக்கத்தில் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியை சேர்ந்தவர் ராஜ். இவர் கடந்த இரண்டு வருடங்களாக வாடகைவீட்டில் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் டைலராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி கடந்த சில நாட்களுக்கு முன் இறந்ததால் அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் மனைவி இறந்துவிட்டதால் வாழ விருப்பமின்றி தற்கொலை செய்து கொள்ள போவதாக எழுதி வைத்து விட்டு வளர்ப்பு நாயுடன் தற்கொலை செய்து கொண்டார்.

நான்கு நாட்கள் ஆகியும் அவர் வீட்டில் இருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் பாஸ்கர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ராஜ் தனது வளர்ப்பு நாயுடன் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனை அடுத்து, அவரின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேதபரிசோதனைககக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Man Committed Suicide With His Dog


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->