மனைவி மீது சந்தேகம்.. கணவன் எடுத்த விபரீத முடிவு.. கோவை அருகே நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


மனைவி மீதான சந்தேகத்தால் டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம், வடவள்ளி பகுதியில் வசித்து வருபவர் பழனிவேலு . இவருக்கு கவுரி என்ற மனைவியும் கமலம் என இரு மனைவிகள் உள்ளனர். கடந்த 2011- ம் ஆண்டு இவரது முதல் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அவர் மதுவிற்கு பழக்கத்திற்கு அடிமையானார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக பழனிவேலு தனது இரண்டாவது மனைவி கமலத்தின் மீது சந்தேகப்பட்டு தகராறு செய்து வந்துள்ளார். இதில், மனஉளைச்சலில் இருந்த அவர்  சம்பவதன்று,  அந்த பகுதியில் உள்ள கருவேல மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Man Committed Suicide Near Vadavalli


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->