மகனுக்கு திருமணமாகாத விரக்தியில் தந்தை எடுத்த விபரீத முடிவு..!
Man Committed Suicide Near Thiruppaththur
மகனுக்கு திருமணமாக விரக்தியில் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், பெரியகம்மியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பைசூன். இவருக்கு ரபிக் என்ற மகன் இருக்கிறான். ரபிக்கு கடந்த சில ஆண்டுகளாக திருமணம் செய்ய பெண் தேடி வருகின்றனர். ஆனால், அவருக்கு சரியான வரன் அமையவில்லை என கூறப்படுகிறது.
இதனால், மன உளைச்சலில் இருந்த பைசூன் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Man Committed Suicide Near Thiruppaththur