கடன் தொல்லை காரணமாக காய்கறி வியாபரி எடுத்த விபரீத முடிவு..! - Seithipunal
Seithipunal


கடன் தொல்லை காரணமாக இளைஞர் தற்கொலை செய்து கொண்டிருந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூடாபுரத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது42). இவர் அந்த பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.  இந்நிலையில், அவர் அளவுக்கு அதிகமாக கடன் வாங்கியதாக தெரிகிறது. தொழில் சரியாக நடக்காததால் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத நிலையில் இருந்துள்ளார்.

கடன் கொடுத்தவர்கள் திரும்ப கேட்டு தொல்லை கொடுத்து வந்ததால் அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டில் தனியே இருந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடன் தொல்லையால் காய்கறி வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Man committed suicide Near Krishnagiri


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->