வீடியோ!  சண்டையை தடுக்க வந்த பக்கத்து வீட்டுகாரரை கடித்து குதறிய கொடூர கணவன்! - Seithipunal
Seithipunal


நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா எரவாஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் மாதவன்(35) இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டின் அருகே செந்தில்(32) பாக்கியலெட்மி தம்பதியினர் வசித்து வருகின்றனர். 

திருமணம் ஆகி ஓராண்டாகும் இவர்களுக்கு அடிக்கடி பிரச்சனை ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் நேற்று செந்தில் குடிபோதையில் அவரது மனைவியை தாக்க முயற்சித்துள்ளார். இதை பார்த்த பக்கத்து வீட்டை சேர்ந்த மாதவன் மற்றும் அக்கம் பக்கத்தினர் தடுத்துள்ளார். 

இதில் ஆத்திரம் அடைந்த செந்தில் மாதவனை காலில் கடித்து குதறி கீழே தள்ளிவிட்டுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மாதவன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். குதிரை, நாய், பூனை, எலி கடியை விட மனித கடி விஷம் அதிகம் என்பதால் நாய்கடி ஊசி மூன்று போடப்பட்டுள்ளது. 

மேலும் 10 நாய்கடி ஊசி போட வேண்டும் என்றும் தொடர் சிகிச்சையில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். குடும்ப சண்டையை தடுக்க சென்ற நபரை கடித்து கொதறியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் : மணி 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man bites another man in mayiladuthurai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->